வரும் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்றபடி காட்சியளிப்பார் - காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் தகவல்
Jul 23 2019 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்றபடி காட்சியளிப்பார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில், புகழ் பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம், ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில், 23-வது நாளான இன்று, ராமர் நிற பட்டாடை உடுத்தி, அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அத்திவரதருக்கு மல்லிகை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தி முழக்கங்களுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்றும் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்றபடி பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.