நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் காட்சி தரும் அத்திவரதர் - காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் 37-வது நாளாக இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
Aug 6 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயத்தில், அத்திவரதர் தரிசனத்தின் 37-வது நாளான இன்றும், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில், நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31-ம் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். 37-வது நாளான இன்று நீலம் மற்றும் வெண்ணிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். செண்பகம், முல்லை மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஏலக்காய் மற்றும் மல்லிகை மலர்களால் அத்திவரதரின் கிரீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.