திருச்சியில் நின்றகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் : திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
Aug 9 2019 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் அத்திவரதர் நின்ற கோல சேவையை, திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சேவித்தனர்.
காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க இயலாதவர்களுக்கு, திருச்சி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதர்கைலாசநாதர் ஆலயத்தில், அத்திவரதர் சேவை சாதித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு, சோமவாரத்தில் கைலாசநாதருக்கு விபூதி அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, பக்தர்கள் தரிசித்து செல்ல ஏதுவாக அத்திவரதர் சயன கோலம் மற்றும் நின்ற கோலம் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களாக சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், நேற்று தொடங்கி 10ம் தேதி வரை மூன்று தினங்கள் நின்றகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பெரும் திரளான பக்தர்கள் வருகைதந்து அருளாளன் அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மேற்கொண்டு வருகின்றனர்.