வரலட்சுமி பூஜையைமுன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் சிறப்பு பிரார்தனை
Aug 9 2019 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலயத்தில், வரலட்சுமி விரதத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாளை. பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, வழிபட்டு சென்றனர்.
திருச்சி செடல்மாரியம்மன் ஆலயத்தில், கோமாதா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அலங்கரிக்கப்பட்ட பசுக்களுக்கு அட்சதை தூவி, அகத்திக்கீரை வழங்கி வழிபாடு செய்தனர்.
அரியலூரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற வரலட்சுமி பூஜையில், சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.