வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பெண்கள் சிறப்பு வழிபாடு - செல்வம் செழிக்க, வாழ்வு சிறக்க பிரார்த்தனை
Aug 9 2019 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இன்று வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
அஷ்ட லட்சுமிகளும் ஒரே ரூபம் கொண்டு இல்லத்தில்
எழுந்தருளும் வரலட்சுமி நோன்பு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகள் மற்றும் கோயில்களில், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். சென்னை தியாகராயா நகரில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு திரண்ட பெண்கள் பூஜைகள் செய்து, செல்வ பெருகவும், வாழ்வு சிறக்கவும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.