இலங்கையில் அமைதி நிலவுகிறது : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு என அமைச்சர் தகவல்
Aug 13 2019 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தற்போது அமைதி நிலவி வருவதாக அந்நாட்டு அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், சென்னை தமிழ்ச்சங்கம் நடத்தும் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன், இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.