அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Aug 13 2019 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை, மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அத்திரவரதர் வைபவம் இன்று 44-வது நாளாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் அத்திவரதர் வைபவம் நிறைவடைகிறது. இந்த நிலையில், அத்திவரதர் வைபவத்தை, மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக் கோரி பக்தர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க விரும்புவதால், அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.