திருச்சி: சென்னப்பசாமி கோயிலில் சாட்டை அடி வாங்கியும், தலையில் தேங்காய் உடைத்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்
Aug 14 2019 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள சென்னப்பசாமி கோயிலில், சாட்டை அடி வாங்கியும், தலையில் தேங்காய் உடைத்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மணப்பாறை அருகே அமைந்துள்ள இக்கோயிலில், மொண்டிப்பட்டியில் சென்னப்பசாமி, மகாலெட்சுமி அம்பாள், பீரேஷ்வரசாமி, அகோர வீரபத்திரசாமி, ஏழு கன்னிமார், பாப்பாத்தியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் குடிகொண்டு அருள்பாலித்து வருகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆடித் திருவிழாவையையொட்டி, கடந்த 1-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்கள் சாட்டையடி வாங்கியும், தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, பொங்கல் வைத்து வழிபட்டனர்.