ஒருகோடி பக்‍தர்கள் தரிசித்த அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு - அடுத்த 40 ஆண்டுகளுக்‍கு அனந்தசரஸ் குளத்திற்குள் வாசம் செய்யப்போகும் அத்திவரதர்

Aug 16 2019 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதுவரை ஒரு கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று நிறைவுநாள் என்பதால், விஐபி உள்ளிட்ட எவ்வித பாஸ்களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில், அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 46வது நாளான நேற்று மட்டும், சுமார் 5 லட்சம் பக்தர்கள் வந்த நிலையில், இதுவரை ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று ஒருநாள் மட்டுமே அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என்பதால், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விஐபி உள்ளிட்ட எவ்வித பாஸ்களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில்​வைப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00