ஆவணி மாத முதல் ஞாயிறு - சிறப்புப்பூஜை : ஆயிரக்கணக்கான பெண்கள் மஞ்சள், பால் ஊற்றி வழிபாடு
Aug 18 2019 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு நாகராஜருக்கு மஞ்சள் பொடி, உப்பு, பால் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
நாகராஜா கோவிலில், ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கோவிலில் திருமண தடை தோஷம், நாக தோஷம் நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், கோயிலில் அமைந்துள்ள நாகராஜர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி, உப்பு தூவியும் வழிபட்டனர்.