வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா 29ம் தேதி தொடக்கம் - விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
Aug 20 2019 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் 29ம் தேதி தொடங்கவுள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, பேராலயத்தில் வர்ணம் பூசுதல், அலங்கார மின் விளக்குகள் அமைத்தல், குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 60 லட்சம் பக்தர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் நடவடிக்கையில் ஆலய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.