வடமாநிலங்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி கோலாகலம்
Aug 25 2019 2:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ண ஜெயந்தி விழா வடமாநிலங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி வடமாநிலங்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் ராதை வேடமிட்டு வீடுகள் விழாக்கோலம் பூண்டன. வதோதராவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆயிரத்து இருநூறு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடமணிந்து நடனமாடினர்.
இதேபோன்று மகாரஷ்டிரா, உத்தரபிரதேசம், ஜம்மு உள்ளிட்ட பல மாநிலங்களில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகை களைகட்டியது. உயரத்தில் தொங்கும் பானையை மனித பிரமீடுகள் அமைத்தும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் போட்டி போட்டு உடைத்தனர்.