மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Sep 9 2019 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பிட்டுக்கு மண்சுமந்த வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு, சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை அரங்கேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சொக்கநாதர், மீனாட்சி அம்மன், பிரியா விடையுடன் ஆரப்பாளையம் வைகை ஆற்றோரம் உள்ள, பிட்டுத்தோப்பு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், மாணிக்கவாசகரும் எழுந்தருள பிட்டுத் திருவிழா பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் சுவாமி வேடமணிந்த பட்டரும், மன்னர் வேடமணிந்த பட்டரும் சுவாமியின் பிட்டுக்கு மண்சுமந்த லீலையை நிகழ்த்திக் காட்டினர்.