விக்கிரவாண்டி அருகே கோயில் திருவிழாவில் இருப்பிரிவினரிடையே மோதல் : கல்வீச்சு தாக்குதல் - 20 பேர் படுகாயம்
Sep 10 2019 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கோயில் திருவிழாவில் இருப்பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பொம்பூர் கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் நடைபெற்றது. பேருந்து நிறுத்தம் அருகே சாமி ஊர்வலம் சென்றபோது பட்டாசு வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மற்றொரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 20 பேர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொம்பூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தாழ்த்தபப்ட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆண்களை, காவல்துறையினர் வீடு புகுந்து கைது செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.