ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை : கல்வெட்டு மூலம் சிலையின் பழமை தெரியவந்தது
Sep 11 2019 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த எரகனஹள்ளி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை அதன் வரலாறு தெரியாமல் பாழடைந்த ஒரு கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அறிந்த பக்தர் ஒருவர் கோயிலின் வரலாறு குறித்து கல்வெட்டுகளை வைத்து ஆராய்ச்சி செய்தார். அதில், அக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதும், அங்குள்ள பெருமாள் சிலையை ராமானுஜர் வந்து நிறுவி பூஜை செய்ததும் தெரியவந்தது. இந்த தகவல் பரவியதையடுத்து, இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.