தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு திருப்பதியில் முக்கிய பதவி : அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமனம்

Sep 20 2019 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில், ஓ. பன்னீர் செல்வத்தின் பினாமி என கூறப்படும் சேகர் ரெட்டிக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி அறங்காவலர் குழுவில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி, கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதை அடுத்து அறங்காவலர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய உறவினரான ஒய்.வி சுப்பா ரெட்டி என்பவரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவராக நியமித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, இந்திய சிமெண்ட்ஸ் குழும தலைவர் சீனிவாசன் உள்பட மொத்தம் 29 பேரை அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமித்தது.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுவில் இருந்தவரும், ஓ. பன்னீர் செல்வத்தின் பினாமி என கூறப்படுபவருமான தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்பட 7 பேரை ஆந்திர அரசு சிறப்பு அழைப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00