நாகை திருவாவடுதுறை ஆதினத்தில், மடாதிபதி, கட்டளைத் தம்பிரானுக்கும் இடையே மோதல் : இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
Sep 20 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்திலுள்ள திருவாவடுதுறை ஆதினத்தில், மடாதிபதிக்கும், கட்டளைத் தம்பிரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.
குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ம் நூற்றாண்டை சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழகம் மட்டுமின்றி, காசி உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆலயங்களும், கிளை மடங்களும் உள்ளன. இந்த மடத்தின் கிளை மடமாகிய, மகாலிங்க சுவாமி ஆலயத்தில், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்த சுவாமிநாத தம்பிரான், உடல்நிலை சரியில்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக, ஆதீனம் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் உத்திராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன. ஆனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவாமிநாத தம்பிரான், காசியிலிருந்தபடி ஆதீன மடாதிபதி மீது குற்றம்சாட்டி வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை, திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர் மறுத்துள்ளார். மேலும், சுவாமிநாத தம்பிரான் முழுமையாக துறவறம் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.