இடைகாடர் சித்தரின் அவதார திருவிழா : திருவண்ணாமலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை அமைத்து சிறப்பு யாகம்
Sep 21 2019 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இடைகாடர் சித்தரின் அவதார திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு நடத்தினர்.
18 சித்தர்களில் முக்கிய சித்தராக கருதப்படுபவர் இடைகாடர். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து முக்தி அடைந்தார். இவருக்கு ஆண்டுதோறும் அவதார திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ மகரிஷி இடைகாடர் 18 சித்தர் அவதார திருவிழாவையொட்டி இடைகாடருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, 18 மூலிகை பொருட்களை கொண்டு யாக சாலை அமைத்து சிறப்பு யாகம் நடத்தினர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு இடைகாடரை வழிபட்டனர்.