கொலு வைப்பது அடுத்த தலைமுறைக்கு கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கும் நவராத்திரி
Oct 3 2019 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழா கொண்டாட்டங்கள் கோயில்களிலும், வீடுகளிலும் களைகட்டியுள்ளன. கலைநயத்துடன் கூடிய கொலு பொம்மைகளை மக்கள் தங்கள் வீடுகளில் வைத்து முப்பெரும் தேவியரை வழிபடுகின்றனர்.
கலைமகள், மலை மகள், அலைமகள் என முப்பெரும் தேவியரை போற்றி வழிபடும் நவராத்திரி விழா கடந்த 29ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. 9 நாட்களில், முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரித்தான நவராத்திரி விழாவை வீடுகளில் மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் திருமதி. இந்துமதி சொக்கலிங்கம் என்பவர் தங்கள் இல்லத்தில் அழகான கொலு அமைத்துள்ளார். இந்த வருடம் அமைத்திருக்கும் கொலுவில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், மாணவர்களின் மத்தியில் பேசுவதைப் போன்ற பொம்மைகளையும் அவர் வைத்துள்ளார்.