ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலை, திருப்பதி புறப்பட்டது - கருட சேவையின்போது பெருமாளுக்கு சாற்றப்படும்
Oct 3 2019 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் உள்ள பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கருடசேவை நாளை நடைபெறவுள்ள நிலையில், பெருமாளுக்கு சாற்றப்படுவதற்காக மலர்கள் கொண்டு மாலை மற்று கிளி தயாரிக்கும் பணி நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.