திருப்பதி கோயிலில் பிரமோற்சவ விழா கோலாகலம் : வேணுகோபாலசுவாமி அலங்காரத்தில் மலையப்பசாமி - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Oct 3 2019 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான இன்று, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக தங்க கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி, கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜமன்னார் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக நான்கு மாட வீதிகளில் எழுந்தருளினார். இதில் பக்தர்களின், கோலாட்டம் கும்மியாட்டம் உள்ளிட்ட தெய்வீக நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.