தூத்துக்குடி - குலசேகரபட்டிணம் முத்தராமன் கோவில் தசரா திருவிழா : காளி வேடம் அணிந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி ஊர்வலம்
Oct 4 2019 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி - குலசேகரபட்டிணம் முத்தராமன் கோவில் தசரா திருவிழாவினை ஒட்டி காளி வேடம் அணிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவினை ஒட்டி ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டி காளி, குரங்கு, கரடி, சிங்கம் ராஜா, ராணி, பிச்சைகாரன், பெண் வேடம் என பல்வேறு வேடங்கள் தரித்து 9 நாட்கள் விரதம் இருப்பர். அந்த வகையில் தூத்துக்குடியில் தசரா திருவிழாவுக்காக காளி வேடம் அணிந்த நூற்றுக்கான பக்தர்கள் தூத்துக்குடி இசக்கிஅம்மன் கோவிலில் பூஜையில் கலந்து கொண்டதுடன் ஆடி பாடியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.