திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கருட சேவை - லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Oct 5 2019 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தங்க கருட சேவையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க கருட சேவை, நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி, நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தார். அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், மகாவிஷ்ணுவின் திருநாமங்களைக் கூறி, தரிசனம் செய்தனர்.

கருட சேவையை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் திரண்டு இருந்தனர். எனவே, அனைவரும் தரிசிக்கும் வகையில், ஆங்காங்கே பிரமாண்டமான டிவிக்களை வைத்து, கருடசேவை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. பிரம்மோற்சவ விழாவில் 6ஆம் நாளான இன்று காலை, அனுமன் வாகன வீதி உலா, மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், இரவில் யானை வாகன வீதி உலா நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00