நவராத்திரியையொட்டி வடபழனி கோயிலில் பிரமாண்ட கொலு - இன்னிசை நிகழ்ச்சியில் பக்தி பாடல்களைப் பாடிய குழந்தைகள்
Oct 5 2019 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில், தனியார் இசைப்பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில், குழந்தைகளின் பக்திப் பாடல்கள், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
நவராத்திரி திருவிழாவின்போது கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, சென்னை வடபழனி பழனியாண்டவர் கோயிலில், பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, நாள்தோறும் பக்தர்கள் கண்டுகளித்து வருகின்றனர். மேலும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சென்னை அசோக் நகரில், தனியார் இசைப்பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியில், குழந்தைகள் பங்கேற்று பாடிய பக்தி பாடல்கள், பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளான நேற்று, காஞ்சிபுரம் மாவட்டம் நாகலுத்து பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிங்கப்பட்டு, தனலட்சுமி அவதாரத்தில் எழுந்தருளி காட்சியளித்த அம்மனை, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.