திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-வது நாள் : சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
Oct 6 2019 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று, சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணன் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏழாவது நாளான இன்று, உற்சவர் மலையப்ப சாமியின், சூரிய பிரபை வாகன சேவை, கோவில் மாட வீதிகளில் நடைபெற்றது. பத்ரி நாராயணர் திருக்கோலத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் மாட வீதிகளில், கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒலிக்க, மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
மலையப்ப சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்து வழிபாடு நடத்தினர்.