ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பூக்குடலை திருவிழா : மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் - ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Oct 6 2019 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் எறிபத்த நாயனாரின் பூக்குடலை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடந்த புராண நிகழ்வினை நினைவு படுத்தும் விதமாக ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வளர்பிறை மஹா அஷ்டமியன்று சிவனடியார்கள் சார்பில், பாரம்பரிய பூக்குடலை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அனைத்து பக்தர்களும் பூக்குடலை ஏந்தி ஆலயத்திலிருந்து மேளதாளத்துடன் கரூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தாங்கள் கொண்டு வந்த பூக்களை இறைவனுக்கு வழங்கி வணங்கினார்கள். ஊர்வலத்தில் புகழ் சோழர் மன்னன், சிவகாமி ஆண்டார், எறிபத்த நாயனார், மற்றும் கல்யாணப சுபதீஸ்வர், அலங்கார வல்லியுடன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் பல ஆயிரத்துக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.