அனுமதியின்றி புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை ஆளில்லா விமானம் மூலம் வீடியோ : அதிகாரிகளின் மெத்தனபோக்கு - பக்தர்கள் குற்றச்சாட்டு
Oct 7 2019 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் அனுமதியின்றி ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் உள்ள பிரசித்தி பெரிய புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலை மர்ம நபர் உரிய அனுமதியில்லாமல் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சோழ மன்னர்கள் காலத்து கோயில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஆளில்லா விமானம் மூலம் தஞ்சை பெரிய கோயிலில் வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தொல்லியல் துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் மெத்தனபோக்கு காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் அரங்கேறுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.