கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு - அதிகாலை முதலே குவிந்த பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

Oct 7 2019 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திரளான பக்‍தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கல்வி கடவுளாக போற்றப்படும் சரஸ்வதிக்‍கென நாட்டிலேயே தனி ஆலயம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கூத்தனூரில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் தான் கவிச்சக்‍கரவர்த்தி ஒட்டக்‍கூத்தருக்‍கு சரஸ்வதி அருள்பாலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரஸ்வதி பூஜையையொட்டி, அதிகாலையில் இருந்தே அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இத்தினத்தில் மட்டுமே அம்மன் பாதங்களில் பக்தர்கள் தங்களது கரங்களால் மலர் தூவி பூஜை செய்ய அனுமதிக்‍கப்படுகிறது. எனவே இன்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்து அரிசியில் தமிழின் முதல் எழுத்தான `அ` எழுத்தை எழுதி, கல்வியில் மேன்மை அடைய பிரார்த்தனை செய்தனர்.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை அய்யாரப்பர் ஆலயத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சன்னதியில், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00