தாய்லாந்து மாரியம்மன் கோயிலில் ஆயுத பூஜை கொண்டாட்டம் : தமிழர்கள், தாய் மக்கள், சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து தரிசனம்
Oct 7 2019 7:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து மகா மாரியம்மன் கோவிலில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் 200 ஆண்டுகள் பழமையான உலகப் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்து ஆலயமாக இருந்தபோதிலும் தாய்லாந்தின் மக்கள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். ஆயுத பூஜையையொட்டி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தமிழர்கள், தாய்லாந்து மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.