தூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா - இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
Oct 8 2019 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில், மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டி காளி, குரங்கு, கரடி, சிங்கம், ராஜாராணி உள்ளிட்ட வேடங்கள் தரித்து, 9 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்தினர். பலவிதமான வேடங்கள் அணிந்த பக்தர்கள், இன்று நள்ளிரவு 12 மணிக்கு, கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ள மகிஷாசூரசம்ஹாரத்தில் கலந்து கொள்கின்றனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்பாலகோபால் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோயில் கடற்கரை மற்றும் கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை போன்ற அத்தியாவசிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.