கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி - 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு
Oct 9 2019 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளின் அணிவகுப்புடன் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட ஊர்வலமும் இதில் இடம்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டிற்க்கான நவராத்திரி திருவிழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வாகன பவனி போன்றவை நடைபெற்றன. 10-ம் திருவிழாவான பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. பகவதி அம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பரிவேட்டை நிகழ்ச்சிக்காக, மகாதானபுரம் நோக்கி நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளும், பக்தர்கள் முத்துக் குடை ஏந்தியும் சென்றனர். நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் பொய்க்கால் குதிரை யாட்டம், பொம்மலாட்டம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் போன்ற 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம் வழியாக மகாதானபுரம் வந்தடைந்தது. அங்கு பகவதி அம்மன், பாணாசுரன் என்ற அரக்கனை வில்-அம்பு கொண்டு வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.