நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Oct 26 2019 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அம்பாள் தங்கச் சப்பரத்திலும், நெல்லையப்பர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருள, காட்சி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிவன் ஆலயத்தில் சங்கர ராமேஸ்வரர் - பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.