கந்த சஷ்டியையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Nov 4 2019 9:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழநி மற்றும் பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழநி முருகன் கோவிலில், கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று, சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை சோழவந்தான் அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோவிலில், முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை வராகநதிக்கரையில், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், முருகப் பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் மேளதாளம் முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.