திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்பாபிஷேக நிகழ்ச்சி : உற்சவருக்கு 8 டன் மலர்களால் அபிஷேகம்
Nov 5 2019 9:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு எட்டு டன் மலர்களைக் கொண்டு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஒரு முறை உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டிற்கான புஷ்பாபிஷேகம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, 8 டன் எடையுடைய பல்வேறு வகையான மலர்கள் சென்னை, பெங்களூரு, விஜயவாடா ஆகிய நகரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக மலர்களை திருப்பதி மலைக்கு அனுப்பி வைத்தனர். தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து ஏழுமலையான் கோயிலுக்கு மலர்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உற்சவ மூர்த்திகளுக்கு மலர்கள் சமர்ப்பித்து தேவஸ்தான அர்ச்சகர்கள் புஷ்பாபிஷேகம் நடத்தினர்.