தாமிரபரணி மகாபுஷ்கர நிறைவு விழா : ஆற்றில் தாமிரபரணி அன்னை சிலை கரைப்பு
Nov 5 2019 9:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் தாமிரபரணி மகாபுஷ்கரம் நிறைவு விழாவையொட்டி, அன்னை சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது.
தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் 11 முதல் 23 வரை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல், கடலில் கலக்கும், துாத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை, பல்வேறு படித்துறைகள், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்கர விழாவின் ஓராண்டு நிறைவு விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றில் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களிலும் ஆரத்தி நடைபெற்றது. ஓராண்டாக வழிபாடு மேற்கொள்ளப்பட்ட தாமிரபரணி அன்னை சிலை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி அன்னையை தரிசனம் செய்தனர்.