திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாயொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் வைபவம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Nov 6 2019 9:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழா, அடுத்த மாதம், 25-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளியில் நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபத வாசல் திறப்பு வைபவம், வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது.