மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாதம் : நாளை முதல் அமலாகிறது புதிய திட்டம்
Nov 7 2019 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கவுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தீபாவளி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், லட்டுகளை தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகள் காரணமாக லட்டு வழங்கும் தேதி மாற்றப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை முதல் இலவச லட்டு வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.