மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு வழங்கும் திட்டம் - நாளை தொடங்கப்படவுள்ளதால் ஏற்பாடுகள் தீவிரம்
Nov 7 2019 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம், கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் நாளை தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் பக்தர்களுக்கு இலவசமாக 30 கிராம் எடையுள்ள லட்டு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு மீனாட்சியம்மன் கோவில் திருப்பணி குழுவின் நிதியிலிருந்து, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.