கார்த்திகை பூர்ணிமா புனித நீராடல் விழா கோலாகலம் : சரயு நதியில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
Nov 12 2019 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா விழாவை முன்னிட்டு, அங்குள்ள சரயு நதியில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். அயோத்தியில் ஆண்டுதோறும் கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை பூர்ணிமா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்தே சரயு நதியில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். Chhattisgarh முதலமைச்சர் Bhupesh Baghel பங்கேற்று வழிபாடு நடத்தினார். அயோத்தி வழக்கு தீர்ப்புக்குப்பின் கொண்டாடப்படும் முதல் கார்த்திகை பூர்ணிமா என்பதால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.