ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது
Nov 12 2019 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 13 அடி உயரமுள்ள சிவலிங்கத்திற்கு காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு 500 கிலோ எடையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை வழிப்பட்டனர்.
நாகை மாவட்டத்தில் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 100 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம் கொண்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில், அன்னாபிஷேக வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. சிவபெருமான் திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு கனி வகைகளைக் கொண்டு அலங்கரித்தும் மகா தீபாராதனை நடைபெற்றது.
திருப்பூர் அருகே அலகுமலையில் உள்ள பிரசுத்தி பெற்ற ஸ்ரீப்ரஹன் நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில், அன்னாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.