சபரிமலை பக்தர்களை பின்தொடர்ந்து செல்லும் நாய் : 480 கி.மீ தூரம் கடந்து பக்தர்களுடன் நாயும் பாதயாத்திரை
Nov 18 2019 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுடன், நாய் ஒன்று வெகுதூரம் பின்தொடர்ந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 31-ம் தேதி, ஆந்திராவின் திருமலாவில் இருந்து ஐயப்ப பக்தர்கள் 13 பேர், சபரிமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். 480 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, தற்போது கர்நாடகாவின் Chikkamagaluru என்ற இடத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கிய இடத்தில் இருந்து, அவர்களை பின்தொடர்ந்து செல்லும் இந்த நாய், சற்றும் களைப்படையாமல், பின்தொடர்ந்து கொண்டே செல்கிறது.