சேலையூரில் மந்த்ராலயம் நிர்மாணிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் : 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கல்
Nov 18 2019 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த சேலையூர் மகாதேவன் நகரில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மா. கரிகாலனால் நிர்ணயிக்கப்பட்ட புது மந்த்ராலயத்திற்கு, மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஸ்ரீராகவேந்திரருக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து ராகவேந்திர சுவாமிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திரு. மா.கரிகாலன் தொடங்கி வைத்தார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.