சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனத்திற்காக 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு - ஆந்திராவை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் பதிவு
Nov 19 2019 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செல்வதற்காக 45 வயதிற்கு உட்பட்ட 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மறுதீர்ப்பு வரும் வரை சபரிமலைக்கு 50 வயதுக்குட்பட்ட பெண்களும் சென்ற தீர்ப்பே பின்பற்றப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 319 பெண்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதில் யாரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.