சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக தொலைபேசி சேவை : 24 மணி நேரம் செயல்படும் 1800 425 1757 எண்ணை தொடர்புகொள்ளலாம்
Nov 19 2019 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக தனி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், 24 மணி நேர தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை வரும் 31-ம் தேதி வரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசியின் எண்ணான 1800 425 1757 எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி விவரங்களைப் பெறலாம். தேனி-குமுளி சாலையில் வீரபாண்டி கெளமாரியம்மன் திருக்கோயிலிலும், தென்காசி -புளியரையில் நெற்களஞ்சியம் அருகிலும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.