கார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் : விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார்
Dec 5 2019 8:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீப திருவிழாவின் 5-ம் நாள் உற்சவத்தில், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் 4 மாட வீதிகளில் வலம் வந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 5-ம் நாள் விழாவான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய திருவிழாவாக மகா ரதம் என்று அழைக்கக்கூடிய மரத்தேர் பவனி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.