திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பு கூடத்தில் தீ விபத்து -பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு
Dec 8 2019 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பூந்தி தயாரிப்பு கூடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்புக்கான பூந்தி, கோவில் அருகில் இருக்கும் பூந்தி தயாரிப்பு கூடத்தில் தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலம் ஏழுமலையான் கோவிலுக்கு இது அனுப்பி வைக்கப்படும். இந்த கூடத்தில் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பூந்தி தயாரிக்க பயன்படுத்தப்படும் ராட்சத அடுப்புகளில் எரிந்துகொண்டிருந்த தீ அடுப்புக்கும் சுவருக்கும் இடையே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுகள் மீது பற்றியதாக தெரிகிறது. இதனால் இங்குதீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களுடன் விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.