திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது
Dec 9 2019 2:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நாளை, அதிகாலை 4 மணிக்கு கோயில் முன்பாக பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரமான மலையின் மீது, மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, தீப கொப்பரைக்கு கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றன. பின்னர், 15-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் இக்கொப்பரையை, தோளில் சுமந்து சென்றனர். 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட இக்கொப்பரையில், பக்தர்கள் வழங்கும் மூவாயிரத்து 500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.