சபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

Dec 13 2019 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதியளித்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை, 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, கடந்த மாதம் மாற்றப்பட்டது. இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, அனைத்து வயது பெண்களையும், சபரிமலையில் வழிபட அனுமதிக்‍கலாம் என்ற முந்தைய தீர்ப்புக்‍கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, பெண் ஆர்வலர் பிந்து என்பவர் சபரிமலை செல்ல முற்பட்டார். ஆனால், அவர் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, சபரிமலை செல்லும் பெண்களுக்‍கு பாதுகாப்பு வழங்கக்‍கோரி, பிந்து உள்ளிட்ட 2 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என இன்று தெரிவித்தது.

கோயிலுக்‍குள் காவல்துறையை நிறுத்த விருப்பமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. வழக்‍கை தொடர்ந்த 2 பெண்களுக்‍கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடரும் என்றும், சபரிமலை மறு சீராய்வு மனுக்‍கள் விரைவில் விசாரிக்‍கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00