சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் - கோவில் நிர்வாகம் தகவல்
Dec 15 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த ஒரு மாதத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல, மகர விளக்கு பூஜைக்காக, கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து, சபரிமலைக்கு வந்துச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கோவிலின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில், இதே நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் வருவாய், 60 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 27 நாட்களில் மட்டும், வருவாய் 100 கோடி ரூபாயை நெருங்கி உள்ளதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய், காணிக்கைகள், அப்பம் மற்றும் அரவணை பிரசாதங்கள் மூலமாக கிடைத்துள்ளன. இதில் காணிக்கையாக மட்டும், பக்தர்கள் 35 கோடி ரூபாய் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.