நீட் தேர்வு - மாணவர்கள் நலனைக் கருதி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்
Sep 17 2021 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக மாணவர்கள் நலனைக் கருதி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு புதிய ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு, மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.